ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளை எப்போது வேண்டுமானாலும் மத்திய அரசின் பணிக்கு அழைத்துக் கொள்ளலாம் என இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் கொண்டு வர மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், இந்திய ஆட்சிப் பணிகள் விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஒன்றிய அரசு செய்ய உத்தேசித்துள்ள திருத்தம் மாநில சுயாட்சிக்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானதாகவும், அதனால் ஆட்சிப் பணிகளின் விதியை திருத்தம் செய்யும் முடிவை கை விட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் கொண்டு வரும் முடிவுக்கு தமிழம் மட்டுமின்றி கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகளும் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.