தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டது. இச்சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்ததில் என்ன தவறும் இல்லை என்று பொறுப்பு தலைமை நீதிபதி மாநில கூறினார். ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் மரணங்கள், குடும்பங்கள் வறுமையில் வாடுவதையும் தடுக்கவே இந்த தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார். இந்த வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தது