மதுரை மாவட்டம், பாலமேட்டில் உள்ள மகாலிங்க சுவாமி கோவிலில், வணிகவரித்துறை மற்றும் பத்திரபதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி உடல்நலம் பெற வேண்டி, சிறப்பு பூஜையினை பாலமேடு கிராம பொது மக்கள்,மகாலிங்கசுவாமி மடத்துக் கமிட்டித் தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதி தங்கமணி ஆகியோர் முன்னிலையில், சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், பாலசுப்பிரமணியன், கிருஷ்ணமூர்த்தி, மனோகரவேல், பாண்டியன், வேலு, ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.