THE KOAVI HERALD
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பாடாய் படுத்தி அத்தனை பேரை யும் முடக்கி புரட்டிப்போட்ட கொரானா பாதிப்பிலிருந்து உலகம் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. ஆனாலும் அந்த நோய் பாதிப்பு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களில் கொரானாவின் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சையிலிருந்து மீண்டவர்கள் உடல்நலம் என்பது முன்பு போல இல்லை. சோர்வு, உடல் பலஹீனம், அசதி, முன்பு போல் பணியிடத்தில் பணிபுரிய முடியாதது போன்ற உபத்திரவங்களால் அவதிப்படுகின்றனர்.
தவிர இந்தக் காலகட்டத்தில் பத்து நாள், பதினைந்து நாட்கள் காய்ச்சல் வந்து மீண்டவர்கள் கூட ஒரு வித உடல் சோர்வி னால் அவதிப்பட்டு வருகின் றனர். முன்பு போல ஓடியாடி வேலை செய்ய முடியவில்லை. பழைய சுறுசுறுப்பு என்பதை மீட்டெடுக்க முடியவில்லை என்பதெல்லாம் அவர்களின் அனுபவ வெளிப்பாடாக இருக்கிறது. இவையெல்லாம் கொரானா வின் தாக்கமா என்பது இன்னமும் மருத்துவ உலகில் ஆய்வில் நிரூபிக் கப்படாததாகவே இருந்து வருகிறது .
அதேசமயம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட வர்கள் பல் வேறு இணைநோய்க ளால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், மார டைப்பு ஏற்பட்டு சிலர் உயிரிழப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இதற்கு கொரோனா சிலர் தடுப்பூசியை காரணமாக கூறினர்., தவிர தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஸ்டீராய்டு மருந்துகளின் பின்விளைவுகளும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்பட்டது. ஆனாலும் இதை மருத்துவ நிபுணர்கள் அருதியிட்டுக் கூறவில்லை.
அதேசமயம், கொரோனா தாக்குதலுக்கு உள்ளான ஒருவரின் உடலில் ரத்தம் உறைதல் பிரச்னையை ஏற்படுத்தி தீவிர இதய பிரச்னை, பக்கவாதம், கைகால் போன்ற உறுப்புகள் செயலி ழப்பு போன்ற நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கொரோனா வைரஸ் குறித்து நடத்தப்பட்டு வரும் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
“கொரோனா வைரஸின் தாக்கம் ஒருவரின் உடலில் அதிகமாகும்போது ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்படுகிறது. இது டிஸ்சிமினேடட் இன்ட்ராவாஸ்குலார் கோயாகுலேஷன் (Disseminated intravascular coagulation) எனப்படும். அதாவது, பரவலான ஊடுருவும் ரத்த உறைதல். இவ்வகை ரத்த உறைதலில் மெல்லிய ரத்தக் குழல்களினுள் ரத்த செல்கள் சிறு சிறு கட்டிகளாக உறைந்து உடலினுள் ரத்த ஓட்டத்தைத் தடைசெய்கிறது!’ என்பது ஏற்கனவே நடந்த ஆய்வில் சொல்லப்பட்ட தகவல்கள். அதுபோலவே கொரோனா வைரஸ் ஆண்களின் விந்து செல்களைப் பாதித்து அவர்களை ஆண்மை இழக்கச் செய்வதாகவும் தகவல்கள் பரவின. ஆனால், இதை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு நிறுவனமும் ஏற்கவில்லை.
“கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படும் என்பது ஒரு யூகமாகத் தெரிவிக்கப்படுகிறதே ஒழிய அதற்கு எந்த நிரூபணமுமில்லை. ரத்தம், சிறுநீர் போன்ற மனித உடல் திரவங்களில் கொரோனா வைரஸ் இருந்ததுபோல் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்து திரவத்தில் வைரஸ் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே ஆண்களின் இனப்பெருக்கத் திறனை பாதிக்கும் என்று உறுதியாக கூறி விட முடியாது!’ என்று கடந்த 2021ம் ஆண்டு மருத்துவ ஆய்வு ஒன்று கூறியது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுமா? என்பது தொடர்பாக மும்பை ஐ.ஐ.டி., மும்பை ஜஸ்லோக் மருத்துவ மனை இணைந்து ஓர் ஆய்வை நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் ‘கொரோனா பாதிப்புக்குள்ளான நபர்களுக்கு ஆண் மை குறைபாடு, அதா வது அவர்களின் விந்தனுக் களில் மலட்டுத்தன்மை அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது!’ என்று தெரிவித்துள்ளது.
இந்த ஆய்விற்கு கொரோனா பாதிப்புக்கு உள்ளாகாத 10 ஆண்கள் மற்றும் கொரோனாவில் இருந்து மீண்ட 17 பேர் உள்பட மொத்தம் 27 ஆண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரின் விந்தணுக்கள் பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனை முடிவுகளின் மூலம் கொரோனா பாதித்தவர்கள் மற்றும் பாதிக்காதவர்கள் விந்தணுக்கள் ஒப்பிடப் பட்டன. இதில், கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இயல்பாக இருப்பவர்களைவிட சில முக்கிய மாறுபாடுகள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது என்கிறார்கள் இந்த ஆய்வில் ஈடுபட்ட மருத்துவ வல்லுநர்கள்.
‘‘கொரோனா பாதிப்பு ஏற்பட்ட வர்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைந்திருந் தது. மேலும் அவர்களின் விந்தணுவின் தரம் மற்றும் செயல்பாடும் குறைந்து காணப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா பாதிப்பு உள்ளா கியிருந்தவர்களின் விந்தணுக்களில் இன பெருக்கத்திற்கு தேவையான புரோத அளவு பாதியாக குறைந்திருந்தது. அதாவது, கொரோனா தாக்காத ஆண்களின் புரோட்டீன்களை விட கொரோனா தாக்கி குண மடைந்த ஆண்களின் புரோட்டீன்கள் பாதிக்கும் குறைவாக இருந்தன. மேலும், அதன் நகரும் தன்மை, சரியான வடிவிலான விந்தணு எண்ணிக்கை ஆகியவையும் குறைவாக காணப்பட்டன. எனவே, லேசான, மிதமான கொரோனா பாதிப்பு கூட ஆண்களின் குழந்தை பேறு திறன் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிப்பு ஏற்படுத்தி, மலட்டுத்தன்மைக்கு காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனாவில் இரு ந்து குணமடைந்த பிற கும் அந்த பாதிப்பு நீடிப்பது தெரியவந்தது. கொ ரோனாவை உண்டாக்கும் சார்ஸ் வைரஸ், பொதுவாக சுவாச உறுப்புகளைத்தான் தாக்கும். இருப்பினும், அந்த வைரசும், அதற்கு உடல் காட்டும் எதிர்வினையும் இதர திசுக்களையும் சேதப்படுத்துவது கண்டறியப்பட்டது!’’ என்பதே இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கும் தகவல்கள்
ஆக கொரானா பாதிப்பு ஆண் மலட்டுத் தன்மையை ஏற்படுத்துகிறது என்ற முடிவை மும்பை ஐஐடி-யின் ஆய்வுமுடிவுகள் உறுதி செய்துள்ளது. ஏற்கனவே குழந்தையின்மைக்காக பல்வேறு மருத்துவர்களிடம் காத்திருக்கும் தம்பதிகளின் எண்ணிக்கை பல மடங்கு கூடிக் கொண்டே யிருக்கிறது. நகரத்துக்கு நகரம், ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு கருத்தரிப்பு மையங்கள் உருவாகி வந்துள்ளன. இந்த சூழ்நிலையில் கொரானாவும் தன் பங்குக்கு ஆண் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தியுள்ளது மருத்துவத் துறையினருக்கு ஒரு சவலாகவே அமைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
KAMALA KANNAN Ph. 9244319559