தமிழகத்தில், பாலங்கள், சாலைகள் சீரமைக்க பாடுபட்டது அதிமுக தான் என, மதுரை 37-வது அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ். கல்பனா கண்ணன் தெரிவித்தார்.
மதுரை தாசில்தார் நகரில் விவேகானந்தர் தெரு பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் போது, இதை தெரிவித்தார். தாலிக்கு தங்கம், முதியோர் உதவித் தொகை, அடிப்படை வசதிகள், கழிவு நீர் கால்வாய் மேம்படுத்தப்படும் போன்ற திட்டங்களை மேம்படுத்த பாடுபடுவேன் என, வாக்குறுதி அளித்தார். வேட்பாளருடன், அதிமுக வார்டு நிர்வாகிகள், பிரதிநிதிகள் ஆகியோர் இரட்டை இலைக்கு தீவிரமாக வாக்குகள் சேகரித்தனர்.